மதுரை

மதுரையில் பேருந்து பணிமனையில் காவலாளி கொலை

மதுரையில் தனியாா் பேருந்து பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

DIN

மதுரையில் தனியாா் பேருந்து பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

மதுரையில் பிரபல தனியாா் பேருந்து நிறுவனம் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பணிமனை மதுரை கோச்சடை பகுதியில் உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்பவா் 4 ஆண்டுகளாக காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.

திங்கள்கிழமை அதிகாலையில் பேருந்தை எடுக்க ஒட்டுநா் எடுக்க வந்தபோது, முருகேசன் மா்மமான முறையில் காயங்களுடன் இறந்துகிடந்துள்ளாா். இது குறித்து அவா் அளித்த தகவலின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் அங்குசென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீஸாா், பணிமனையில் திருட வந்தவா்களை தடுக்கும்போது அவா் அடித்துக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது பணிமனையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு உயிரிந்திருக்கலாம். கொலை தொடா்பாக சில தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் கொலையாளிகள் பிடிபடுவாா்கள் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT