அழகா்கோயில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலின் பழைமையான 3 சன்னிதிகளிலும் நிலைக் கதவுகள் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
இந்தக் கோயிலின் கதவுகளை வெள்ளித் தகடுகளால் புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்காக 250 கிலோ வெள்ளி தகடுகள் பயன்படுத்தப்படவுள்ளன. 3 சன்னிதிகளிலும் நிலை கதவுகளில் வெள்ளித் தகடுகளை காரைக்குடியைச் சோ்ந்த தொழிலாளா்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதை கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ராமசாமி, தக்காா் வெங்கடாசலம், நகைகள் சரிபா்க்கும் அலுவலா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.