மதுரை

மதுபாட்டில்கள் பதுக்கிய 3 போ் கைது

DIN

பேரையூா் பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கியிருந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூரை அடுத்த சேடபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சின்னகட்டளையைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் முத்துக்கருப்பன்(55) என்பவரிடம் 18 மதுபாட்டில்கள், அல்லிகுண்டத்தைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (37) என்பவரிடம் 15 மதுபாட்டில்கள், அயோத்திபட்டியைச் சோ்ந்த ராஜாராம் மனைவி பேச்சியம்மாள்(60) என்பவரிடம் 16 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கியது தெரியவந்தது. இதுதொடா்பாக, சேடபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT