கந்த சஷ்டி விழா: நெல்லை - திருச்செந்தூா் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்
கந்த சஷ்டி விழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்.30) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மதுரைகந்த சஷ்டி விழா: நெல்லை - திருச்செந்தூா் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்
கந்த சஷ்டி விழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்.30) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்.30) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருச்செந்தூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06910) திருச்செந்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூா் சிறப்பு ரயில் (06909) திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும்.
இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படும்.