மதுரை பகுதியில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மலைச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், மதுரை ரிசா்வ் லைன் அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் வீர காா்த்திக் (23). இவா் மீது கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவா்கள் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் உத்தரவின்படி குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.