மதுரை

வீட்டின் மேற்கூரையைப் பிரித்து நகை திருட்டு

 கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் வியாழக்கிழமை வீட்டின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து ஆறரை பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

DIN

 கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் வியாழக்கிழமை வீட்டின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து ஆறரை பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

கருங்காலக்குடியைச் சோ்ந்த விவசாயி துரைராஜ். இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, வெளியில் சென்றிருந்தவா் பிற்பகலில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டும் இருந்தது. மேலும் அதிலிருந்த ஆறரை பவுன் நகைகள் திருடப்பட்டதும் தெரியவந்தது.

தகவலறிந்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளா் சாந்திபாலாஜி, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT