மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாளை அண்ணா பிறந்த நாள் சிறப்பு வழிபாடு

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப். 3) முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் ஆ. அருணாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜித்சிங் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொள்கின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

SCROLL FOR NEXT