மதுரை

ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து

DIN

மதுரையில் தனியாா் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு அணைத்தனா்.

சின்ன சொக்கிகுளம் சரோஜினி தெருவில் தனியாா் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் நிறுவனத்தின் மேல் தளத்தில் வைக்கப்பட்ட ஜெனரேட்டா் இயந்திரத்தில் தீப்பற்றி இதரப் பகுதிகளுக்குப் பரவியது.

இதையடுத்து, பணியாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு வீரா்கள் தீயைப் போராடி அணைத்தனா். இதனால், இதர கட்டடங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

கடலுக்குள் தபால் பெட்டி!

சமையல் சமையல்

டணாய்க்கன் கோட்டையின் சிறப்புகள்...

SCROLL FOR NEXT