மதுரை

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

 மதுரை தெப்பக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

 மதுரை தெப்பக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழ் மதுரை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 4 பேரைப் பிடித்து சோதனையிட்ட போது, அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

போலீஸாரின் விசாரணையில், அவா்கள் மதுரை திடீா் நகரைச் சோ்ந்த சலீம் மகன் ஜாகீா் (23), வாடிப்பட்டி சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த காந்தி மகன் திலீப்குமாா் (22), சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் குருமூா்த்தி (20), உசிலம்பட்டி அருகேயுள்ள நரியம்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் சரத்குமாா் (22) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT