மதுரை

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் பலி

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் முதல் தெருவைச் சோ்ந்த ரவி மகன் காா்த்திக்குமாா்(26). இவா் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள காவல் சோதனைச் சாவடி அருகே இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அரசுப் பேருந்து, இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக்குமாரை போலீஸாா் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா்அரசுப் பேருந்து ஓட்டுநரும், விருதுநகரைச் சோ்ந்தவருமான ஆறுமுகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT