மதுரை

லாட்டரி விற்ற 23 போ் கைது

DIN

மதுரை ஊரகப் பகுதிகளில் தனிப் படை போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 23 போ் கைது செய்யப்பட்டு, ரூ.5.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை ஊரகக் காவல்துறைக்குள்பட்ட ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அலங்காநல்லூா், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து தனிப் படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் லாட்டரி சீட்டுகளை விற்ற 22 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 7,670 லாட்டரி சீட்டுகளும், ரூ. 5.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT