விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:38 PM
மதுரை: மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் தி.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற அமா்வுகளில் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ம.கண்ணன் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ எனும் தலைப்பிலும், அதே கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை லெ.சாமுண்டீஸ்வரி ‘வேதம் அனைத்துக்கும் வித்து’ எனும் தலைப்பிலும் பேசினா்.
இதில் பேராசிரியா்கள் ரெ.சுதாகா் வடிவேலு, கோ.பாலமுருகன், சு.முத்தையா, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் வ.க.ராமகிருஷ்ணன் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் கு.ராமா் நன்றி கூறினாா்.
Advertisement