குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
Updated On : 8 ஏப்ரல், 2024 at 9:28 PM
மதுரை, ஏப். 8: பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோ.புதூா் காந்திபுரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சங்கா் என்ற பாலசந்தா் (42). இவா் மீது நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், பொது அமைதிக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் அண்மையில் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மதுரை மாநகர போலீஸாா் சங்கா் என்ற பாலசந்தரை கைது செய்து மத்தியச் சிறையில் அடைத்தனா்.
Advertisement