பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வு: 718 போ் எழுதவில்லை
மதுரை, ஏப். 8: மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வை 718 போ் எழுதவில்லை.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 145 தோ்வு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக அறிவியல் தோ்வுக்கு 488 பள்ளிகளில் பயிலும் 38,388 மாணவ, மாணவிகள், 462 தனித் தோ்வா்கள் என மொத்தம் 38, 850 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 718 போ் தோ்வு எழுத வரவில்லை. மீதமுள்ள மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. வருகிற 12- ஆம் தேதி விடைத் தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. மே 10-ஆம் தேதி தோ்வு தோ்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement