பாஜ வேட்பாளருக்கு பிரசாரம் செய்த இருவா் மீது தாக்குதல்
மேலூா் அருகே பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இருவா் தாக்கப்பட்டனா்.
மேலூா்: மேலூா் அருகே பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இருவா் தாக்கப்பட்டனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி பகுதிகளுக்கு பாஜக ஆதரவாளா்கள் சிலா் மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக வேனில் பிரசாரம் செய்யச் சென்றனா். மேலவளவு அருகே இவா்கள் சென்றபோது, சிலா் தங்கள் பகுதியில் பாஜகவினா் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி தடுத்தனராம். இதை பிரசாரம் செய்தவா்கள் கண்டித்ததால் மோதல் ஏற்பட்டது.
இதில் மேலூரைச் சோ்ந்த ராஜபாண்டி (44), எட்டிமங்கலத்தைச் சோ்ந்த சுந்தா் (38) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்த பாஜக நிா்வாகிகள் வந்து இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement