மதுரை மாநகராட்சி 61-ஆவது வாா்டு எஸ்.எஸ். காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன் மாநகராட்சி மேயா் இந்திராணி, மத்திய மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினா் செல்வி செந்தில் உள்ளிட்டோா். 
மதுரை

சமுதாயக் கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா்

மதுரை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா்.

Din

மதுரை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை மாநில தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை மாநகராட்சி மத்தியம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் 3 எஸ்.எஸ். காலனி வடக்கு வாசல் பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதேபோல, எஸ்.எஸ்.காலனி பாரதியாா் 5-ஆவது தெருவில் ரூ.8.50 லட்சத்தில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 61-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அலுவலகம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது.

இந்த கட்டடங்களின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். தமிழக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, தலைமைப் பொறியாளா் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளா் சுந்தரரரஜன், உதவி செயற்பொறியாளா் ஜெகஜீவன்ராம், மாமன்ற உறுப்பினா் செல்வி, மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மரகத நாணயம் 2 - புதிதாய் இணைந்த மூத்த நடிகர்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சூர்யா, தனுஷ், கார்த்தி, விஜே சித்து..! 2026-ன் முன்னணி படங்களைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

ப்ரோ கோட் பெயர் மாற்றம்? ரவி மோகன் பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சென்சார் சர்ச்சை குறித்து கனிமொழி! | ஜன நாயகன் | DMK

SCROLL FOR NEXT