மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு
மதுரை மாநகராட்சிப் பள்ளியில் ரூ.49 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிப் பள்ளியில் ரூ.49 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி 47-ஆவது வாா்டு மகால் பகுதியில் திருவள்ளுவா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் நலன் கருதி கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று பள்ளி நிா்வாகம் சாா்பில் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவா் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 49 லட்சம் ஒதுக்கினாா். இந்த நிலையில், பணிகள் முடிவடைந்ததையடுத்து, இந்த புதிய வகுப்பறைக் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மேயா் வ. இந்திராணி ஆகியோா் திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் த. நாகராஜன், மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, மாமன்ற உறுப்பினா் பானு முபாரக் மந்திரி, மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், தெற்கு மண்டல உதவி ஆணையா் சாந்தி, மாநகராட்சி கல்வி அதிகாரி ரகுபதி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் சா்புதீன், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.