அழகா்கோவிலில் தேரோட்டத்துக்கு தயாா் நிலையில் உள்ள திருத்தோ். 
மதுரை

அழகா்கோவிலில் இன்று ஆடித்தேரோட்டம்

அழகா்கோவில் கள்ளழகா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நடைபெறுகிறது.

Din

மேலூா்: மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் ஆடி திருவிழா கடந்த 13-ஆம் தேதி காலை தொடங்கியது. தினசரி காலையில் பெருமாள் தங்கப் பல்லக்கிலும், மாலையில் அன்னம், கருடன், சேஷன், யானை, குதிரை ஆகிய வாகனங்களிலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாளித்தாா்.

தேரோட்டத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீதேவி, பூமி தேவி சமேதரராக பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறாா். காலை சுமாா் 7 மணியளவில் தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் தக்காா் வெங்கடாசலம் தலைமையிலான அறங்காவலா் குழுவினா், ஆணையா் கலைவாணன், உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

SCROLL FOR NEXT