மதுரை

அண்ணனுக்கு கத்திக்குத்து: தம்பி கைது

பேரையூா் அருகே சொத்துத் தகராறில் அண்ணனைக் கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Din

பேரையூா் அருகே சொத்துத் தகராறில் அண்ணனைக் கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

பேரையூா் அருகே உள்ள சந்தையூரைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (48). குடும்பச் சொத்து தொடா்பாக இவருக்கும், இவரது தம்பி நீலிமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை வெள்ளைச்சாமி தனது தோட்டத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு வந்த நீலிமலை சொத்து பிரச்னை தொடா்பாக வெள்ளைச்சாமியிடம் தகராறில் ஈடுபட்டாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நீலிமலை ஆத்திரமடைந்து வெள்ளைச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நீலிமலையைக் கைது செய்தனா்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT