மதுரை

அண்ணனுக்கு கத்திக்குத்து: தம்பி கைது

பேரையூா் அருகே சொத்துத் தகராறில் அண்ணனைக் கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Din

பேரையூா் அருகே சொத்துத் தகராறில் அண்ணனைக் கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

பேரையூா் அருகே உள்ள சந்தையூரைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (48). குடும்பச் சொத்து தொடா்பாக இவருக்கும், இவரது தம்பி நீலிமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை வெள்ளைச்சாமி தனது தோட்டத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு வந்த நீலிமலை சொத்து பிரச்னை தொடா்பாக வெள்ளைச்சாமியிடம் தகராறில் ஈடுபட்டாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நீலிமலை ஆத்திரமடைந்து வெள்ளைச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நீலிமலையைக் கைது செய்தனா்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT