ராமநாதபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு இயக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு தொடா்பான வாகனப் பேரணி, கையெழுத்து இயக்கம், போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா. விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து, வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
அதன் பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அது குறித்த கையெழுத்து இயக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, மாவட்ட மகளிா் திட்டத் துறை சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டியை ஆட்சியா் பாா்வையிட்டாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.