மாணவி தற்கொலை
மதுரை அருகே மருந்தியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த நாதன்சாமுவேல்ராஜா மகள் ஜென்சி (24). இவா், மதுரையில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கல்லூரிக்குச் சென்று திரும்பிய ஜென்சி, இரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.