முகப்பு
மதுரை

சீருடை தைக்கும் பணியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கக் கோரிக்கை

Updated On : 28 மே, 2024 at 11:29 PM
மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தையல் மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள்.
பகிர்:

இதுதொடா்பாக, மதுரை மாவட்ட தையல் மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச சீருடைகளை தயாரிக்கும் பணி, தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், பல ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதர்ரம் காப்பாற்றப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான சீருடை தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க அரசு, முயற்சிகள் மேற்கொள்வதாக வெளியான தகவல்கள் அதிா்ச்சி அளிப்பதாகவுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, நிகழாண்டிலும் பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகள் தைக்கும் பணியை தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கே வழங்க வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.