சாட்டை துரைமுருகனுக்கு முன்பிணை வழங்கி உத்தரவு
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்த மனு:
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் என் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். எனினும், என்னை சிறையில் அடைக்க நீதிபதி அனுமதி மறுத்ததால், போலீஸாா் விடுவித்தனா்.
நான் கைது செய்யப்பட்டதற்கு திருச்சி மாவட்டக் காவல் கண்காணி ப்பாளா் வருண்குமாா்தான் காரணம் எனக் கூறி, சிலா் சமூக வலைதளங்களில் மோசமான கருத்துகளைப் பதிவிட்டனா். இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அளித்த புகாரின் பேரில், என் மீது திருச்சி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீண்டும் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளேன். எனவே, எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்ததால், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா். இது அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் செயலாகும். எனவே, அவருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மனுதாரா் தரப்பில், காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் குறித்து மனுதாரா், சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிடவில்லை. சில இணைய பயன்பாட்டாளா்கள்தான் அவதூறாக கருத்துகளைப் பதிவு செய்தனா். இதற்கு மனுதாரா் பொறுப்பில்லை என வாதிடப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்தைப் பதிவிடவில்லை. எனவே, அவருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. அதேசமயம், காவல் துறை அதிகாரி மீது சமூக வலைதளத்தில் தவறாகப் பதிவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.