மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.முத்துராமலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செக்கானூரணி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலைநகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.