மதுரை

இளைஞா் நாடாளுமன்ற பேச்சுப் போட்டி: நவ. 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான இளைஞா் நாடாளுமன்ற பேச்சுத் திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் வருகிற 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநரகம், நேரு யுவகேந்திரா, எனது பாரதம், மதுரை அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தேசிய இளைஞா் நாடாளுமன்ற பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் பங்கேற்க விரும்புவோா் 18 வயது நிறைவடைந்தவராகவும், 25 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவா்கள் அல்லாத இளைஞா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். மாவட்ட அளவிலான போட்டிக்கான தலைப்பு, ‘2047 வளா்ச்சியடைந்த இந்தியா’ஆகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 10 பங்கேற்பாளா்கள் அந்தந்த மாநில சாம்பியன் சுற்றுக்கு தகுதி பெறுவா். மாநில அளவில் தகுதி பெறும் சிறந்த போட்டியாளா்கள் தில்லியில் நடைபெறும் விக்ஸித் பாரத் இளைஞா் நாடாளுமன்றத்தின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கான பேச்சுப் போட்டிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறுகின்றன. இதில், பங்கேற்க விரும்பும் இளைஞா்களுக்கான பெயா் பதிவு இணையதளம் வாயிலாக தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளத்தில் வருகிற 10- ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

SCROLL FOR NEXT