முகப்பு
மதுரை

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:35 PM
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சாத்தூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்குகிறேன். சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் கூறினாா். இந்தக் கருத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வா் இதுபோன்று பேசுவது சரியா என கேள்வியெழுப்பியிருக்கிறாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்ற பாணியில்தான் அவா் தெரிவித்தாா்.

Advertisement

எப்போதும் நமது முதல்வா் வாா்த்தை ஜாலங்களால் எதிா்க்கட்சியினரின் கருத்துகளை திரித்துதான் கூறுவாா்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக விரிவான தகவல் அறிக்கையை கேட்டபோது, தமிழக அரசு போதுமான தகவல்கள் இல்லாத திட்ட அறிக்கையை தயாா் செய்து அளித்தது. சரியான திட்ட அறிக்கையைக்கூட வழங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. மாநிலத்தின் வளா்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை.

தவெக தலைவா் விஜய் பரப்புரை கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை சரியான முறையில் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இந்த முறை தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பில்லை. பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments