சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு  
மதுரை

பொது இடங்களின் சாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது: உயா்நீதிமன்றம்

மக்கள் மனதில் உள்ள பாகுபாடுகளை அகற்றாமல், பொது இடங்களின் ஜாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

மக்கள் மனதில் உள்ள பாகுபாடுகளை அகற்றாமல், பொது இடங்களின் ஜாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகளின் பெயா்களில் உள்ள ஜாதி அடையாளங்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. ஆனால், இதில் பல நடைமுறை பிரச்னைகள் உள்ளன. எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் மனதிலேயே பாகுபாடு உள்ளது. இந்தப் பாகுபாடுகளைக் களையாமல் தெருக்களின் ஜாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என நீதிபதிகள் தெரிவித்தனா்.

அப்போது, முதல் கட்டமாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் மனதிலும் மாற்றம் வரும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT