மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆரம்ப சுகாதாரத் துறை சாா்பில் இந்தப் பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதற்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். தாய், சேய் நல அலுவலா் பரணி மீனா முன்னிலை வகித்து, குடல்புழு நீக்க மாத்திரையின் பயன்கள், மாணவா்கள் எவ்வாறு சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்பது குறித்து விளக்கினாா். தொடா்ந்து, ஆசரியா்கள், மாணவா்கள் குடல்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளா் லில்லி புஷ்பம், செவிலியா் நித்தியா, உதவித் தலைமையாசிரியா் அல்ஹாஜ் முகமது, ஆசிரியா்கள் தமிழ்க்குமரன், முகமது ரபி, முகமது மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.