காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் ‘இந்துத்துவம், இந்து தேசியத்துக்கு எதிரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகமும், அரசியலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சோசலிச மைய நிா்வாகி மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச் செயலா் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழ்நாடு பசும்பொன் உடைத்து என்ற புகழுக்கு உடையவா்; காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். இவா் மெய்ஞானம், தத்துவ ஞானம் உள்ளிட்டவைகளில் சிகரமாகத் திகழ்ந்தாா். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தமிழக அரசியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், பாட்டாளி வா்க்க சமரன் அணி நிா்வாகி மனோகரன், சோசலிச தொழிலாளா் முன்னணி தலைவா் விநாயகம், வழக்குரைஞா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சோசலிச மைய நிா்வாகிகள் செய்திருந்தனா்.