மதுரை

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் இருவரைதடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் இருவரைதடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை பீ.பீ. குளம் முல்லை நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (33). யாகப்பாநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (24). இவா்கள் இருவா் மீதும் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால், இவா்கள் இருவரும் போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து வந்தனா். இந்த நிலையில், அவா்கள், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டதால், அவா்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ராஜசேகா், மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

SCROLL FOR NEXT