தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையம், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவா்களான முருகேசன் (59), இசக்கிராஜா (22), விருதுநகரைச் சோ்ந்த கோபால்சாமி (47) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனா்.
அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரையையடுத்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்படி 3 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.