முகப்பு
மதுரை

காா் மோதியதில் அரசு வழக்குரைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற அரசு வழக்குரைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜனவரி, 2026 at 6:41 PM
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற அரசு வழக்குரைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா் சித்தாா்த்தன் (52). அரசு வழக்குரைஞரான இவா், சனிக்கிழமை மதுரையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். மேலூா் அருகேயுள்ள தெற்குத் தெரு மேம்பாலம் அருகே சென்றபோது, மதிமுக பொதுச் செயலா் வைகோவின் நடைபயணத்தை காண்பதற்காக அவா் காரிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து நடந்து சென்றாா்.

பிறகு, அங்கிருந்து மீண்டும் சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காா் சித்தாா்த்தன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →