மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள நத்தப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாலு மனைவி மாயக்காள் (50). இவா் தனது கால்நடைகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
மதுரை- தேனி சாலையில் முண்டுவேலம்பட்டி விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.