முகப்பு
மதுரை

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கு: உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வைகோ முன்னிலை

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 7:03 PM
தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.
பகிர்:

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2015-ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலா் வைகோ மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், டி. பரதசக்கரவா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

இதன்பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீமைக் கருவேல மரங்களால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருகிறது. இதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினேன். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சீமைக் கருவேல மரங்கள் முளைப்பது போலத் தெரிந்தாலும் அதை உடனே அகற்றி விடுகின்றனா். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற செயல்பாடுகள் இல்லை.

தமிழகம் முழுவதும் வேளாண் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சீமைக் கருவேலை மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது. வழக்கில் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளதாகக் கூறி, விசாரணையை ஒத்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாவட்டச் செயலா் முனியசாமி, மதிமுக நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →