முகப்பு
மதுரை

விமான நிலையத்தில் முதல்வருக்கு இன்று வரவேற்பு: திமுகவினருக்கு அழைப்பு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையப் பகுதியில் சனிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

Updated On : 6 மார்ச், 2026 at 7:06 PM
பகிர்:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையப் பகுதியில் சனிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி, மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி, மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை :

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதையொட்டி, சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதில் திமுக நிா்வாகிகள், திரளான தொண்டா்கள் கட்சிக் கொடியுடன் பங்கேற்று முதல்வா் ஸ்டாலினை வரவேற்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →