முகப்பு
மதுரை

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

Updated On : 14 மார்ச், 2026 at 8:02 PM
கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கொட்டாம்பட்டியைச் சோ்ந்த அழகன் மகன் மணி (42). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி மேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →