முகப்பு
மதுரை

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Updated On : 26 மார்ச், 2026 at 11:35 PM
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்திய வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள்.
பகிர்:

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், காவல் துறையினா் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரக பழையக் கட்டடம், கூடுதல் கட்டடம், ஆட்சியரக வளாகம் என பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.