ராமநாதபுரம்

ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநர் வீட்டில் 7 பவுன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு

DIN

ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநர்  வீட்டில் ரூ.2.30 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
    ராமநாதபுரம் பட்டினம் காத்தான் மீனாட்சி நகர் தெற்குத்தெருவில் குடியிருந்து வருபவர் கருப்பையா மகன் சேதுராஜன்(64). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்த  நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து  7 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.1.25 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் சேதுராஜன் புகார் செய்ததைத் தொடர்ந்து சார்பு-ஆய்வாளர் வெங்கடேசப் பெருமாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT