ராமநாதபுரம்

பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்த 3 பேர் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு, பணம் தர மறுத்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பார்த்திபனூரைச் சேர்ந்த முகம்மதுசாதிக் மகன் சேக்அப்துல் ஹமீது (38) என்பவர், அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்த பெட்ரோல் பங்குக்கு மானாமதுரையைச் சேர்ந்த முத்துராமன் மகன் வசந்த் (18), பாண்டி மகன் சந்தோஷ்குமார் (22), கார்த்திகைச்சாமி மகன் அஜித்குமார் (18) ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனங்களில் வந்து ரூ. 450-க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். பின்னர், பெட்ரோலுக்கான பணத்தை தராமல், மூவரும் சேர்ந்து ஊழியரான சேக்அப்துல் ஹமீதுவிடம் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் சேக்அப்துல் ஹமீது அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் ராஜா வழக்குப் பதிந்து வசந்த், அஜித்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT