ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல்,எம்.சிவாஜி, இ.கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்திடும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்தும், தலித் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கையை விளக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.