முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் ரயில் பாலத்தை கடந்தது மிதவைக் கப்பல்

ஒடிசாவில் இருந்து குஜராத் செல்லும் மிதவைக் கப்பல் செவ்வாய்க்கிழமை பாம்பன்  பாலத்தைக் கடந்து சென்றது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:25 am IST
பகிர்:

ஒடிசாவில் இருந்து குஜராத் செல்லும் மிதவைக் கப்பல் செவ்வாய்க்கிழமை பாம்பன்  பாலத்தைக் கடந்து சென்றது.
ஒடிசா மாநிலம் தாம்ரா துறைமுகத்தில் இருந்து குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு இக்கப்பல் செல்கிறது.  70 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் கடந்த 15 -ஆம் தேதி பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல கப்பல் ஊழியர்கள் பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 
இதனையடுத்து, பாம்பன் ரயில் பாலம் திறக்க ரயில்வே நிர்வாகத்திடம் துறைமுகம் சார்பில் மனு அளித்திருந்தனர். இதனை ஏற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாம்பன் ரயில் பாலம் திறக்க அனுமதி பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாக குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு கப்பல் சென்றது.  பிரமாண்ட கப்பல் பாம்பன் பாலத்தை கடத்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.