ராமநாதபுரம்

திருவாடானை அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

DIN

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு பேருந்தில்  இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகே மயிலாடுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசத்துரை(45). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தேவகோட்டையில் இருந்து வெள்ளையபுரம் செல்லும் அரசு பேருந்தில் சென்றார். அப்போது என் மங்கலம் அம்மன் கோயில் அருகே பேருந்து சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பூசத்துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
இது குறித்து இவரது மனைவி சௌந்தரவள்ளி (35) கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கீழ்க்கண்டனி கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் (45) என்பவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT