ராமநாதபுரத்தில் வணிக வளாகம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள் ள வணிக வளாகம் அருகில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள் ள வணிக வளாகம் அருகில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் வணிக வளாகம் அருகில் பாழடைந்த கட்டடத்தின் முன்புறம் குப்பை கொட்டும் இடம் உள்ளது. இந்த இடத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து தீ மளமளவென பரவியது. தகவலறிந்து ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையிலான குழுவினர் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பாழடைந்த அந்த கட்டடத்தின் கதவுகள், ஜன்னல்கள் ஆகியன உள்பட சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின. அதேபோல பழைய கட்டடத்தின் மேல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுத் துணிகள், வாழைத் தோகைகள் ஆகியனவும் தீப்பிடித்து எரிந்தன. சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.