முதுகுளத்தூர் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்
முதுகுளத்தூர் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மே 15) ஜமாபந்தி தொடங்க உள்ளது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
முதுகுளத்தூர் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மே 15) ஜமாபந்தி தொடங்க உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வட்டாட்சியர் மீனாட்சி ஆகியோர் தலைமையில் ஜமா பந்தி நடைபெறும். உள்வட்டம் வாரியாக ஜமாபந்தி நடைபெறும் தேதி விவரம்: மே 15- முதுகுளத்தூர் வடக்கு, மே 16- முதுகுளத்தூர் தெற்கு, மே17- கீழத்துôவல், மே 18 -மேலக்கொடுமலுôர், மே 22- தேரிருவேலி, மே 23- காக்கூம். மேற்கண்ட உள்வட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நாள்களில் பட்டா மாறுதல், மேல்முறையீடு, வருவாய்துறைச் சான்றுகள் போன்றவற்றுக்கு மனு அளித்து உடனடி தீர்வு பெறலாம். முதுகுளத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.