முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வு

பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 21 மே, 2018 at 11:51 PM
பகிர்:

பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் இடையிலான பாம்பன் ரயில் பாலம் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
ஆண்டுதோறும், இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு கண்டறியும் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்வது வழக்கம். அதனடிப்படையில், திங்கள்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ராதாகிருஷ்ணன், டேனியல் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் பூங்கா வரையில் உள்ள தண்டவாளம் மற்றும் பாலத்தை ஆய்வு செய்தனர்.
இதில், வெடிகுண்டு கண்டறியும் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய் மாயா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.