சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் அரக்காசு அம்மா தர்காவில் கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழா கடந்த அக். 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை நேர்த்தி கடனாக கிடாக்கள், சேவல்கள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரக்காசு அம்மா தர்காவின் மக்பராவில் புனித சந்தனம் பூசி, பிறை வடிவ பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது.இதையொட்டி பொது அன்னதானம் வழங்கப்பட்டது. சாயல்குடி, கடலாடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்களும் பிற மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர் .
இது குறித்து விழாக் கமிட்டியினர் கூறுகையில், ஆண்டுதோறும் புரட்டாசி வளர்பிறையில் அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி இவ்விழாவை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடிவருகிறோம் என்றனர்.