களப்பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நிலைத்த இலக்கை அடைய களப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நிலைத்த இலக்கை அடைய களப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சிகளின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய 4 நாள்கள் சிறப்பு முகாம், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் வீரராகவன் (கிராம ஊராட்சிகள்) தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள், அவசரகால தேவைகள் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளின் நீடித்த நிலையான வளர்ச்சி குறித்த திட்டங்களை, ஊராட்சிகளிலுள்ள களப் பணியாளர்கள் பொதுமக்களிடம் ஆலோசித்து, அறிக்கை தயார் செய்ய சிறப்பு முகாம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி செயலர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், ஒவ்வொரு துறையினருக்கும் தனித்தனியாக அறிக்கை தயார் செய்யும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.