திருவாடானை அரசு மருத்துவமனையில் அபாய நிலையில் மேல்நிலைத் தொட்டி
திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க
திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது, இந்தத் தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது.
இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பயன்பாடற்ற இத்தொட்டியை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.