ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அச்சம்: துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு

DIN

இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அச்சப்பட்டு படகுகளை துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  மீன்பிடித் தொழிலை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்புத் தொழிலாளர்கள் உள்ளனர். இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளால் மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் 7-க்கும் மேற்பட்ட கப்பல்களை எல்லையில் நிறுத்தியுள்ளனர்.
 இதனால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 கடலுக்கு செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். 
இதனால் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏராளமான விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
பெரும்பாலான மீனவர்கள் அண்டை மாநிலங்களுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT