ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் கார் மோதி முதியவர் பலி

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதியதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
திருப்பாலைக்குடி அருகே உள்ள கண்மாய் கரை குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் (70). இவர் சனிக்கிழமை மாலை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வலமாவூர் முனியப்பா விலக்கு சாலை அருகே உப்பூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில் சிங்காரம் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சிங்காரம் மகன் சுரேஷ் (30) அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநரான கீழக்கைரையை சேர்ந்த சீனிஇப்ராஹிம் (46)  என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT